உள்நாடு

இந்திய அழைப்பை ஏற்ற சஜித்..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் இந்தியாவிற்கு பயணம் செய்ய தயாராகி வருவதாகத் தெரியவந்துள்ளது.

இதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்திருந்தார்.

தங்களுக்கு வந்துள்ள அழைப்புகளை பரிசீலித்து திட்டமிட்ட பின்னர் இந்தியாவுக்கு பயணிக்கும் திகதி தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் இந்த விஜயம் இடம்பெறும் எனவும் தேர்தலுக்கு நிறைவடைந்த பின்னர் செல்வதில் அர்த்தமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் அதன்போது சஜித் பிரேமதாசவை சந்தித்து உரையாடியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *