உள்நாடு

ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் இலவச அரிசி வினியோகம்..!

நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் மகளிர் சிறுவர் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக இலவச அரிசி விநியோகம் இரண்டாம் கட்டம் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் அரிசி விநியோகம் இரண்டாம் கட்டம்  ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் ஊட்டச்சத்து மட்டத்தை தொடர்ச்சியாக பேணுவதற்கான அரசாங்கம் உணவு பாதுகாப்பு திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மாவட்ட அரச உயர் அரிகாரிகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கணக்காளர் க.பிரகஸ்பதி தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் என்.கிருபாகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 7302 குடும்பங்கள் இலவச அரிசி பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எம்.எம்.றம்ஸீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *