உள்நாடு

அகில இலங்கை வை .எம் .எம்.ஏ பேரவையின் புதிய தலைவராக சட்டத்தரணி அம்ஹர் ஷரீப் தெரிவு..!

அகில இலங்கை வை. எம். ஏ.பேரவையின் 74 ஆவது ஆண்டு தேசிய மாநாடு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இஹ்ஸான் ஹமீட் அவர்களின் தலைமையில்  வெகு விமர்சியாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக துருக்கி உயர்ஸ்தானிகர் செமிஹ் லுட்புடகுத் அவர்களும்,கௌரவ அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி எல்.தி.பி.தெஹிதெனிய அவர்களும்  கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது  நடப்பாண்டுக்கான வை.எம். எம்.ஏ .பேரவையின் 75 ஆவது தேசிய மாநாடுக்கான தலைவராக சட்டத்தரணி அம்ஹர் ஷரீப் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.மாவனல்லை ஹெம்மாதகமயை பிறப்பிடமான கொண்ட இவர் சப்ரகமுவ மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது வை.எம்.ஏ.பேரவையின் முதலாவது தேசிய தலைவராவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
(பாரா தாஹீர் மாவனல்லை செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *