ஹொரேதுடுவ முஸ்லிம் வித்தியாலயத்துக்கு மாவட்ட அபாவிருத்திக் குழுத் தலைவரின் நிதியில் பாடசாலைக்கு திறன் வகுப்பறை..!
பாணந்துறை ஹொரேதுடுவ முஸ்லிம் வித்தியாலய கல்வி அபவிருத்தி மேம்பாட்டுக்காக களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலையில் திறன் வகுப்பறை அமைக்கப்படவுள்ளது.
பாடசாலையின் கல்வி ஆர்வலர் எம்.ஆர்.எம்.மீஷாத்தின் பரிந்துரையின் பேரில் களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சஞ்ஜீவ எதிரிமான்ன மேற்படி வேலைத் திட்டத்துக்கு பதினொரு லட்சதது ஐம்பதாயிரம் ரூபாவை ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.
இது தொடர்பிலான வைபவம் அதிபர் எஸ்.எச்.முத்தலிப் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பாடசாலை சமூகத்தின் சார்பில் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.நிதி ஒதுக்கீட்டின் அடையாளமாக மாதிரி காசோலை பாராளுமன்ற உறுப்பினரினால் அதிபரிடம் கையளித்து வைக்கப்பட்டது.பிரமுகர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)