உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் சஜித்தினால் திறந்து வைப்பு

ஐக்கிய மக்கள் சக்தி பேருவலைப் பிரதான அலுவலகத்தை எதிர்க் கட்சித் தலைவர் ஸஜித் பிரேமாசா அவர்கள் (01.07.2024) சீனன் கோட்டையில் திறந்து வைத்தார்.ஐ.ம.சக்தி பேருவலை அமைப்பாளர் இப்திகார் ஜெமீல் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பா.உறுப்பினர்களான அஜித் பெரேரா,அஸ்லம் ஹாஜியார்,ஐ.ம.சக்தி களுத்துறை மாவட்ட அமைப்பாளர் எம்.எம் அம்ஜாத் உடபட மாவட்டத்தைச் சேர்ந்த தொகுதி அமைப்பாளர்கள்,ஐ.ம.சக்தி நிறை வேற்றுக் குழு உறுப்பினர்களான டாக்டர் ரூமி ஹாசிம்,அல்ஹாஜ் இபாம் ஹனபி,பிரதேச சபை முன்னாள் தலைவர்களான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம் பதியுத்தீன்,குஸ்மன் சில்வா பேருவளை நகரசபை முன்னாள் எதிர் கட்சி தளைவர் ஹஸன் பாஸி உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பேருவலைப் பகுதியில் ஐ.ம.சக்தியைப் பலப் படுத்தி கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஐ.ம.சக்தியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் பேருவலையில் திறந்து வைக்கப் பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு வருகை தந்த எதிர்க் கட்சித் தலைவருக்கு கட்சி ஆதரவாளர்கள் இப்திகார் ஜெமீல் தலைமையில் மகத்தான வரவேற்பளிக்கப் பட்டது.

(படங்கள் பேருவலை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *