உள்நாடு

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் சூரிய மின் சக்தி கருத்திட்டம் அங்குரார்ப்பணம்

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் புதிய கட்டிடத்தொகுதியில் சூரிய மின் சக்தி கருத்திட்டம் கல்லுாாி அதிபர் பழைய மாணவிகளால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

பாடசாலையொன்று அதன் வரலாற்றில் மற்றொரு மைல்கல்லை அடைந்திருப்பது உண்மையில் மிகவும் பெருமைக்குரிய விடயமாக இருக்கிறது. பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தில் சூரிய மின் சக்தி திட்டம் கல்லுாாி அதிபர் திருமதி நஸ்ரியா முனாஸிடம் கையளிக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இது பாடசாலைக்கு மிக அவசரமானதும் மற்றும் முக்கியமானதுமான தேவையாக உள்ளது.

இந் நிகழ்வில் பழைய மாணவிகள் சங்கத்தின் உப தலைவி பெரோஸா முசம்மில் மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பிணர்கள் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி உறுப்பிணர்கள் மாணவத் தலைவிகளும் கலந்து சிறப்பித்தனர்.


(எம்.எம்.றம்ஸீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *