உள்நாடு

வெகு விமரிசையாக இடம்பெற்ற “தமிழன்” பத்திரிகையின் நான்காவது ஆண்டு பெருவிழா

“தமிழன்” பத்திரிகையின் நான்காவது ஆண்டு பெரு விழா, நேற்று (28) வெள்ளிக்கிழமை மாலை, கொழும்பு – வெள்ளவத்தை, இராமகிருஷ்னன் மண்டபத்தில், “தமிழன்” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜா தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில், “லிப்பர்ட்டி பப்பிளிகேஷன்” தலைவர் திலித் ஜயவீர கலந்த கொண்டார்.இச்சிறப்பு விழா நிகழ்வில், கல்விப் பணிக்காக கந்தையா பத்மநாதன், கலைப் பணிக்காக திருமதி வைத்திஜயந்திமலா, ஊடகப் பணிக்காக வீ. தனபாலசிங்கம், தமிழ் இலக்கியப் பணிக்காக அல் அஸூமத், சமுக சேவைப் பணிக்காக புரவலர் ஹாஷிம் உமர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.

அத்துடன், கலை நிகழ்ச்சிகளும் மாணவர்களுக்கு விசேட வினாப் பொதி, சிறந்த மாணவருக்கான “தமிழனின்” உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள், “இசை வீனை” பரதநாட்டிய நிகழ்ச்சிகள் என்பனவும் இடம் பெற்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், இராதாகிருஸ்னன், ரிஷாத் பதியுத்தீன், மனோ கனேசன், சுமந்திரன், வட மேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் “தமிழன்” பத்திரிகையில் பணிபுரியும் ஊழியர்கள், அபிமானிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 

( ஐ. ஏ. காதிர் கான் , அஷ்ரப் ஏ. சமத் )

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *