உள்நாடு

பெட்டிக்கலோ கெம்பஸுக்கு முன்பாக நெல் லொறி குடைசாய்ந்தது.!

நெல் மூடைகளை ஏற்றி வந்த லொறியொன்று எதிரே வந்த வாகனம் ஒன்றிற்கு வழி விடும்போது பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை பெட்டிக்கலோ கெம்பஸுக்கு முன்பாக இன்று (29) இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி பகுதியிலிருந்து பொலன்னருவை நோக்கி நெல் மூடைகளை ஏற்றி சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரே வந்த வாகனம் ஒன்றிற்கு வழி விடும்போது லொறி பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.விபத்தில் லொறிக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், லொறியில் பயணித்த சாரதியும் நடத்துனரும் காயங்களின்றி தப்பியுள்ளனர்.


(எச்.எம்.எம்.பர்ஸான் – ஓட்டமாவடி)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *