உள்நாடு

அமானிய்யத்துல் இப்றாஹிமிய்யா மத்ரஷா வளாகத்தில் மரம் வளர்க்க கரம் கொடுப்போம் நிகழ்வு

கடந்த 26ஆம் திகதி நுரைச்சோலை அமானிய்யத்துல் இப்றாஹீமிய்யா மத்ரசாவின் அதிபர் எம். ஐ. எம். முபாறக் அலி மௌலவி அவர்களின் தலைமையில் மரம் வளர்க்க கரம் கொடுப்போம் நிகழ்வு இடம்பெற்றது.

மரம் வளர்க்க கரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பயன் தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் YMMA பேரவையின் புத்தளம் மாவட்ட பணிப்பாளர் எம்.நாபில், YMMA கல்பிட்டி கிளையின் ஆலோசகரும், ஆசிரியருமான எச்.எம். சுகைப் மற்றும் இம் மத்ரஸாவின் மௌலவிகளான எம். அஸாம் , டி. தவ்ஹீத் , எம்.ஏ. முஷாரப் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர் எம். அலி சப்ரி ஆகியவர்களுடன் அமானிய்யத்துல் இப்றாஹீமிய்யா மத்ரசாவின் மாணவர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

(ஹமீட் எம் சுகைப்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *