உள்நாடு

பேருவளை பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள்

பேருவலை ஸேம் ரிபாய் ஹாஜியார் மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை), ஆரியவன்ஸ மகா வித்தியாலய டிஜிட்டல் வகுப்பறைத் தொகுதி (Smart class Room) திறப்பு விழா எதிர் வரும் ஜூலை முதலாம் திகதி (01.07.2024) வெகு விமர்சையாக நடைபெறும்.

பேருவலை ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான அல்ஹாஜ் இப்திகார் ஜெமீலின் அழைப்பின் பேரில் எதிர்க் கடசித் தலைவர் ஸஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.

காலை 10 மணிக்கு ஸேம் ரிபாய் ஹாஹியார் மகா வித்தியாலய டிஜிட்டல் வகுப்பறைக் கட்டிடத் தொகுதியைத் திறந்து வைப்பதோடு 12 மணிக்கு ஆரியவன்ஸ டிஜிட்டல் வகுப்பறைத் தொகுதியைத் திறந்து வைப்பார்.

அதன் பின்னர் ஐ.ம.சக்தி பேருவலை பிரதம அமைப்பாளர் அல்ஹாஜ் இப்திகார் ஜெமீலின் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐ.ம.சக்தியின் பிரதம அலுவலகத்தையும் எதிர்க் கட்சித் தலைவர் ஸஜித் பிரேமதாச அவர்கள் திறந்து வைப்பார்.

இந்நிககழ்வில் ஐ.ம.சக்தியின் களுத்துறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

( பேருவலை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *