உள்நாடு

விளையாட்டு கழகங்களுக்கு ஆற்றிவரும் சேவையினை பாராட்டி கௌரவிக்கப்பட்டார் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்

அம்பாறை மாவட்டத்திலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு ஆற்றிவரும் சேவையினை பாராட்டி கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்கள் பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹீப் கௌரவிக்கப்பட்டார்.

பாலமுனை சுப்பர் ஓர்கிட் விளையாட்டுக்கழகத்தின் 37வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி மற்றும் ஒலுவில் இலவன் ஸ்டார் கழகம் ஏற்பாடு செய்திருந்ந பிரிமியல் லீக் கிரிகெட் சுற்றுத் தொடரிலும் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பாலமுனை ஹிக்மா வித்தியாலய மைதானம், ஒலுவில் அல் ஜாயிஸா மகளீர் கல்லூரி மைதானத்திலும் அம்பாரை மாவட்டத்திலுள்ள முன்னணி கழகங்கள் பங்குபற்றிய இவ் போட்டி நிகழ்வுகளில் கலாநிதி சிராஸ் மீராசாஹீப் கழகங்களினால் பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

(எஸ். சீனிஸ்கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *