விளையாட்டு

இலங்கை அணியின் ஆலோசகர் பதவியை இராஜனாமாச் செய்தார் மஹேல

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக செயற்பட்டு வந்த முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரின் முதல் சுற்றிலிருந்து இலங்கை அணி வெளியேறியிருந்தது. இந்தநிலையில் இலங்கையின் பயிற்றுவிப்பு குழாம் மற்றும் கிரிக்கெட் சபையின் மீது அதிக விமர்சனங்கள் எழுந்திருந்தன. இவ்வாறான நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பயிற்றுவிப்பு ஆலோசகராக பதவியேற்றிருந்த மஹேல ஜயவர்தன தற்போது பதவி விலகியுள்ளார்.

மஹேல ஜயவர்தனவின் இராஜினாமா தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபை “ஜயவர்தன, அவரது பதவிக் காலத்தில், தேசிய அணி கட்டமைப்பு மற்றும் உயர் செயல்திறன் மையத்தின் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செயல்படுத்த உதவியுள்ளார். எனக் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *