உள்நாடு

நிதிகம அல் மினாவில் புலமைப் பரிசில் கருத்தரங்கு

இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு அல்மினா முஸ்லிம் வித்தியாலய அபிவிருத்திச்சங்க ஏற்பாட்டில் பாதிஹ் பவுன்டேசன் அமைப்பின் அனுசரணையில் எதிர்வரும் சனிக்கிழமை (29) நிதிகம அல் மினா முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சைக். கருத்தரங்குகளை நாடளாவிய ரீதியில் நடாத்தி வரும் புலமை வழிகாட்டி ஆசிரியர் எம்.ஆர்.எம்.ரனீஸ் வளவாளராக கலந்துகொள்ளவுள்ளார்.

இக்கருத்தரங்கில் அல் மினா முஸ்லிம் மகா வித்தியாலயம் , கட்டுகலியாவ ஆரம்ப பாடசாலை, மடாட்டுகம முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் ஜாயா ஆரம்ப பாடசாலை ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 100 கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

(எம்.ரீ.ஆரிப் – அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *