உள்நாடு

சட்டவிரோதமாக மட்டி மீன்களை லொறியில் ஏற்றிச் சென்ற நபர் கைது.

சட்டவிரோதமாக மட்டி மீன்கள் சிப்பிகளை கொண்டு சென்ற லொறியொன்றையும் சந்தேக நபர் ஒருவரையும் தம்புத்தேகம பொலிசார் (25) கைது செய்துள்ளனர்.

திருகோணமலையில் இருந்து ஹெட்டிவெவ வரை அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கொண்டு சென்ற சிப்பிகள் அடங்கிய  லொறியொன்றையே தம்புத்தேகம பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த லொறியில் 2000 ம் கிலோவுக்கும் அதிகமான சிப்பிகள் அடங்கிய 50 கிலோ கிராம் அடங்கிய 401 பொதிகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

மட்டி மீன்கள்  சிப்பிகளை கொண்டு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் தேவைப்படுவதுடன்  குறித்த லொறியில் அனுமதிப்பத்திரமின்றி கோழி உணவுகளை கொண்டு செல்வதாக தெரிவித்து  சட்டவிரோதமாக சிப்பிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் லொறி மற்றும் சிப்பிகளை (25) தம்புத்தேகம நீதி மன்றில் பொலிசார் ஆஜர்படுத்தியுள்ளனர்.


(படம்:- எம்.ரீ.ஆரிப் -அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *