உள்நாடு

அதிபர் ஆசிரியர்கள் மீது கண்ணீர்ப் புகை , நீர்த்தாரை பிரயோகம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டத்தின் மீது பொலிஸாரால் நீர் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு கோட்டை பகுதி மற்றும் ஜனாதிபதி செயலக பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.எவ்வாறாயினும், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் பொலிஸாரின் தடைகளையும் மீறி ஜனாதிபதி செயலகம் நோக்கி நகர்ந்தது.

போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *