உள்நாடு

வலம்புரி கவிதா வட்டத்தின் 101 ஆவது கவியரங்கம் – கவிஞர் திலகம் எம். பிரேம்ராஜ் தலைமை..!

தொடர்ச்சியாக 100 கவியரங்குகளை நடாத்தி, இலக்கிய உலகில் அசைக்க முடியாத ஓர் இடத்தைப் பெற்றுக்கொண்ட “வகவம்” எனும் “வலம்புரி கவிதா வட்டம்”, தனது 101 ஆவது கவியரங்கை (21/06/2024) காலை, கொழும்பு – பழைய நகர மண்டபத்தில் நடாத்தியது.
கலகலப்புக்குப் பெயர் பெற்ற “கவிஞர் திலகம்” எம். பிரேம்ராஜ் கவியரங்கிற்குத் தலைமை வகித்தார்.
நிகழ்வுகளை, வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நெறிப்படுத்தினார். செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரையும், பொருளாளர் ஈழகணேஷ் நன்றியுரையும் வழங்கினர்.
“வகவ” சிரேஷ்ட ஸ்தாபகர் சத்திய எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி முன்னிலை அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
தேசிய அமைப்பாளர் எஸ். தனபாலனும் மேடையை அலங்கரித்தார். .
எம்மை விட்டும் மறைந்த வகவக் கவிஞர் மினுவாங்கொடை ஏ. சிவகுமாரினது சகோதரர் செல்லையா தங்கவேலு அவர்களையும், பிரபல எழுத்தாளரும் நாவலாசிரியையுமான சுலைமா ஏ. சமி இக்பால் அவர்களையும் நினைவு கூர்ந்து மௌனப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
“கவிஞர் திலகம்” பிரேம்ராஜ் தனது கவிதை ஆற்றலால் மிகவும் சுவாரசியமாக கவியரங்கை நடாத்தி, சபையை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தார்.
இக்கவியரங்கில், கவிஞர்கள் எம். ஏ. ரஹீமா, ஆர். தங்கமணி, அருந்தவம் அருணா, நியாஸ் ஏ. சமத், கே. லோகநாதன், கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ், வெளிமடை ஜஹாங்கீர், பி. எம். எம். ரமீஸ், இ. கலைநிலா, எம். எஸ். அப்துல் லதீப், நேகம பௌஸுல் சிபானியா, பிறைக்கவி முஸம்மில், ரிஸ்மினா ரபீக், மினுவாங்கொடை ஏ. சிவகுமார், கிண்ணியா அமீர் அலி, இளநெஞ்சன் முர்ஷிதீன், ந. தாமரைச்செல்வி, தமிழ்த் தென்றல் அலி அக்பர் ஆகியோர் கவிதை மழையால் சபையை நனைத்தனர்.
வெகு விமரிசையாக நடந்தேறிய 100 ஆவது கவியரங்கில், “ஆப்பிள் ஆச்சரியங்கள்…!” எனும் தலைப்பில் கவிதை பாடி, அதன் குண நலன்களை விலாவாரியாக எடுத்துரைத்த கவிஞர் அப்துல் லதீப், அதன் தொடர்ச்சியாக அன்றைய கவியரங்கில் அனைவருக்கும் ஆப்பிள் பழமொன்றையும் வழங்கி மகிழ்வித்தார்.
கவிஞர் நியாஸ் ஏ. சமத், வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைனுக்கு, அவர் பாடிய கவிதையை நினைவுச் சின்னமாகக் கையளித்தார்.
நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், வாசுகி வாசு, வாழைத்தோட்டம் எம். வஸீர், முஸ்னி முர்ஷித், ராஜா நித்திலன், எஸ். ஷருக்ஷன், ஏ.கே. இளங்கோ, சு. ஜெகதீஸ்வரன், சிந்தனைப் பிரியன் முஸம்மில், தி. ஸ்ரீதரன், பீ.எம். ஜஸீல், எம்.பீ.எம். சித்தீக், மலாய்கவி டிவாங்ஸோ, வ. சாந்தகுமார், மஸீதா அன்சார், ஆர். எஸ். ரஸ்மியா போன்றோர் இச்சபையை சிறப்புப் பூக்களால் அலங்கரித்தனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

படங்கள் – முஹம்மத் நஸார்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *