உள்நாடு

உடத்தலவின்ன மடிகே ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ள மரநடுகை தின நிகழ்வு..!

உடத்தலவின்ன மடிகே ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் எதிர்வரும் 01.07.2024 திங்கட்கிழமை பாடசாலை மரநடுகை தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

நிகழ்வின் பிரதம அதிதியாக வத்தேகம வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி W.M.T.N குணரத்ன கலந்து சிறப்பிக்கவுள்ளதாக கல்லூரி முதல்வர் ஜனாப் M.A.M தானுஷ் எமது பாடசாலை செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
பழ மரங்கள்,நிழல் தரும் மரங்கள் ,அழகு தரும் மரங்கள் ,மூலிகைச் செடிகள் என வகைப்படுத்தப் பட்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட மரங்கள் நடப்படவுள்ள இந்நிழ்வில் வலயக் கல்வி அலுவலர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் ,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள், நலன்விரும்பிகள், விளையாட்டுக் கழக மற்றும் சமூக நல அமைப்பினர் என சகல தரப்பினரும் கலந்து சிறப்பிப்பார்கள் எனவும் கல்லூரி முதல்வர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *