உள்நாடு

புதனன்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை..! 27,28 ல் பாராளுமன்ற அவசர அமர்வு…!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் அறிவிப்பால் இலங்கை மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஜனாதிபதியின் உரையை அடுத்து எதிர்வரும் 27,28 ஆகிய தினங்களில் அவசர பாராளுமன்ற கூட்டமும் இடம் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *