உள்நாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காத்தான்குடி விஜயம்..! பாலஸ்தீன மக்களுக்கான துஆ பிரார்த்தனை நிகழ்விலும் கலந்து கொண்டார்..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை (23) விஜயம் மேற்கொண்டதுடன் பலஸ்தீன் காஸா மக்களுக்காக நடைபெற்ற துஆ பிரார்த்தனையிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.

பள்ளிவாயிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், அலி  சாஹீர் மௌலானா  ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கா உட்பட பிரமுகர்கள் உலமாக்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஜனாதிபதிக்கு பள்ளிவாயல் தலைவர் கே.எல். பரீட் பொன்னாடை போர்த்தி கௌரவித்துடன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை காத்தான்குடி மக்களிடம் காஸாவில் உள்ள  சிறுவர்களுக்காக சேகரிக்கப்பட்ட 10,769,417 ரூபாவுக்கான   காசோலையும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(எம். பஹத் ஜுனைட்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *