விளையாட்டு

ஏறாவூர் மட் /அல் அஸ்ஹரியன் சம்பியனாக 2013 அணியினர்..!

ஏறாவூர் மட்/ அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் பொன்விழாவினை முன்னிட்டு பழைய மாணவர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் 2024 ம் ஆண்டிற்கான சம்பியனாக 2013 ம் ஆண்டு அணியான சய்லன்ட் சடோவ் சம்பியனாக மகுடம் சூடியது.

19/06/2024 புதன்கிழமை அன்று ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் பகல் மற்றும் மின்னொளி போட்டியாக பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இச்சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டியில்
1999 லீடிங் அஸ்ஹரியன் மற்றும் 2013 ம் ஆண்டு சைலன்ட் சடோவ் ஆகிய இரு அணிகளும் இறுதிச்சமரில் பலப்பரீட்சை நடாத்தியது.

இறுதிப்போட்டியின் போது 2013 சைலன்ட் சடோவ் அணி 1999 ஆண்டு லீடிங் அஸ்ஹரியனை வீழ்த்தி சம்பியனாக மகுடம் சூடியது.

சம்பியனாக தெரிவான அணிக்கான வெற்றிக்கிண்ணத்தினையும் பதக்கங்களையும் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.நழீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

இவ் இறுதிப்போட்டியின் சிறந்த வீரராக சைலன்ட் சடோவ்(2013) அணியின் வீரர் இஹ்சான் தெரிவானார்.
இவ் மென்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரின் சிறந்த ஆட்டநாயகனாக எச்.எம்.ஹஸ்ஸான் (112)தெரிவானதுடன் தொடரின்
சிறந்த பந்து வீச்சாளராக முஹமட் அப்துல்லாஹ்(06)
தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(உமர் அறபாத் -ஏறாவூர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *