உள்நாடு

பழுகஸ்வெவ விபத்தில் இருவர் காயம்.

யாழ்ப்பாணம் கண்டி ஏ9 வீதியில் மரக்கறி வகைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றும் எரிபொருள் வவுசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயத்திற்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வீதியில் பழுகஸ்வெவ பகுதியில் இன்று (20) விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மரக்கறி லொறியின் சாரதியும் நடத்லதுனருமே காயத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

காயத்திற்குள்ளான சாரதியும் நடத்துனரும் யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர்களாவர். யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி நிறுத்தி வைக்கப்பட்டிந்த எரிபொருள் வவுசரின் பின்புறத்தில் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறியின் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டமையினால் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(எம்.ரீ.ஆரிப் – அநுராதபுரம் )

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *