உள்நாடு

தபால் திணைக்களம் குறைந்தபட்ச முத்திரை விலையை 100 ரூபாவாக அதிகரிக்க முடிவு

தபால் முத்திரை ஒன்றின் குறைந்தபட்ச விலையை, 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.

இதற்காக, திரை சேறியின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த 2022 ஆம் ஆண்டு வரை 15 ரூபாவாக இருந்த முத்திரையின் குறைந்த பட்ச விலை, தற்போது 50 ரூபாவாக உள்ளது.

தபால் திணைக்களம் தொடர்ச்சியாக நஷ்டம் அடைந்து வருவதனால், இந்தத் தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாக அனுஷ பல்பிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *