உலகம்

ஜெய்சங்கர் இன்று இலங்கை வருகிறார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (20) இலங்கை வரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை அவர் சந்திக்க உள்ளார்.

அத்துடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜனாதிபதி வழக்கறிஞர் அலி சப்ரியுடன் இருதரப்பு விவாதங்களையும் நடத்துவார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு தமிழ் அரசியல் தலைவர்களையும் மலையக அரசியல் தலைவர்களையும் தனித்தனியே சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *