உள்நாடு

இரண்டொரு தினங்களில் திருமலை ஸாஹிரா மாணவிகளின் பெறுபேறுகள் வெளியாகும்..! பாரளுமன்றில் இன்று கல்வி அமைச்சர் உறுதி..!

அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் இன்னும் இரண்டொரு தினங்களில் வெளியாகுமென பாராளுமன்றத்தில் இன்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயன்த உறுதியளித்தார்.

இம் மாணவிகளின் பெறுபேறுகள் இன்னும் வெளியாகாமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இம் மாணவிகளின் உயர்தர பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை பரீட்சைகள் ஆணையாளர் மேற் கொண்டு வருகிறார்.எனவே அவர் உரிய முறைப்படி அதனை வெளியிடுவார் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *