விளையாட்டு

முதல் சுற்றுடன் வெளியேறிய இலங்கை வீரர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்.

நடைபெற்று வரும் 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்று முதல் சுற்றுடன் நடையைக் கட்டிய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இன்றைய தினம் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் 9ஆவது ரி20 உலகக்கிண்ணத் தொடரில் வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை அணி குழு டீ இல் இடம்பிடித்திருந்தது. இதில் தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் மோசமான தோல்வியை இலங்கை அணி சந்தித்திருந்தது.

பின்னர் நேபாள் அணிக்கு எதிரான போட்டி கடும் மழை காரணமாக iகிடப்பட இலங்கை அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கப்பெற்றமையால் முதல் சுற்றுடன் இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற இறுதி லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை 83 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்று 3 புள்ளிகளுடன் 9ஆது உலகக்கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது.

இவ்வாறு முதல் முறையாக ரி20 உலகக்கிண்ணத் தொடரில் முதல் சுற்றுடன் நடையைக் கட்டிய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இன்றைய தினம் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *