உள்நாடு

மரகஹவெவ விபத்தில் இருவர் காயம்..!

நொச்சியாகம மரகஹவெவ பகுதியில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக நொச்சியாகம பொலிசார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்கவிலிருந்து நொச்சியாகம நோக்கிப் பயணித்த சிறிய வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தின் போது வேனில் பயணித்த  இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேன் சாரதிக்கு தூக்கம் பஸ் ஏற்பட்டமையினாலயே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *