உள்நாடு

பொசன் வாரத்தையொட்டி மதுபானக் கடைகள் மூடப்படும்

பொசன் போயா தினத்தை முன்னிட்டு 21 வெள்ளிக் கிழமை நாடு முழுவதும் அனைத்து மதுபானங்களின் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளதுடன்.புனித வலயங்களில் ஏழு நாட்கள் வரை மதுபானங்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

இதே வேளை அனுராதபுரம் புனித நகரை உள்ளடக்கிய கிழக்கு நுவரகம் , மத்திய நுவரகம் மற்றும் மிஹிந்தலை ஆகிய பிரதேச செயலாளர் பகுதியில் குறித்த காலப்பகுதியில் ஏழு நாட்களுக்கு மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

அனைத்து உரிமம் பெற்ற மதுபானக்கடைகள் ,பார்கள் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்யும் உணவகங்களை  இந்தக் காலப்பகுதியில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கலால் சட்டத்தை. மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(எம்.ரீ. ஆரிப் அநுராதபுரம் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *