உள்நாடு

பொசன் போயா வாரத்தில் அனுராதபுரத்துக்கு பத்து இலட்சம் யாத்திரிகர்கள்.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் பகுதிக்கு 10 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தரவுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தெரிவித்தார்.

பொசன் போயா வாரமான 18 முதல் 24 வரை அனுராதபுரத்தில் பெளத்த மத அனுக்ஷ்டானங்கள் இடம்பெறவுள்ளன.

இதே வேளை பொசன் போயா தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு 4500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

 

(ஏம்.ரீ.ஆரிப்- அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *