உள்நாடு

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தின் ஏஹியா மற்றும் தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்காருக்கும் இடையில் சந்திப்பு

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தின் ஏஹியாவின் இல்லத்தில் தூய தேசத்தின் கட்சிக்கான தலைவர் இஷாம் மரிக்காருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று முன்தினம் (16) இடம் பெற்றது.

இச்சந்திப்பில் தூய தேசத்திற்கான இயக்கம் சம்பந்தமான தெளிவான நகர்வுகள், எதிர்காலத் திட்டங்கள், நோக்கங்கள் மற்றும் இலக்கு என பல்வேறு பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் “முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தின் ஏஹியா தனது முழுமையான பங்களிப்பை தூய தேசத்திற்கான கட்சிக்கு வழங்க உறுதி அளித்ததாக” தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், “எதிர்காலத்தில் எங்களுடைய கட்சியின் வளர்ச்சிக்கு பங்காற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. அவருடைய முடிவுகள் சரியான முடிவுகளாக எடுக்கப்பட வேண்டும். சமூகத்திற்காக நல்ல முடிவுகளை எடுத்து இதன் பிறகாவது எமது மண்ணுக்குத் தேவையான அரசியல் சக்தியை உருவாக்குவதற்கு முன் நின்று சேவை செய்வார் என்று எதிர்பார்க்கின்றோம்.” என்றார் இஷாம் மரிக்கார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *