உள்நாடு

நாட்டில் பிறப்பு வீதம் குறைந்து இறப்பு வீதம் அதிகரித்துள்ளது..! -மகப்பேற்று மருத்துவர்கள் தெரிவிப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடின்படி, இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை 100,000 இற்கும் மேல் குறைவடைந்துள்ளதாக, மகப்பேற்று மருத்துவர்கள் இந்த விடயம் குறித்து அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இறப்பு எண்ணிக்கை 35 ஆயிரமாக அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2017ஆம் ஆண்டு இலங்கையில் 325,000 பேர் பிறந்துள்ளனர். ஆனால், இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 247,000 ஆக குறைவடைந்துள்ளது.
இதற்கிடையில், 2017 இல் 146,000 ஆக இருந்த இறப்புக்கள், 2023 இல் 181,000 ஆக அதிகரித்திருந்தன.
திருமணமான பல தம்பதிகள் கருவுற்ற காலத்தில் இலங்கையை விட்டும் வெளியேறியமையே, பிறப்புக்கள் குறைவடைவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக, மகப்பேற்று வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதைத் தாமதமாக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகளில் திருமணம் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை, 12.5 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும், மகப்பேற்று வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *