உள்நாடு

கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்காவிடின் பணிப்புறக்கணிப்பு தொடரும் – இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த எச்சரிக்கை

கல்விசாரா ஊழியர்களுக்கும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவிற்கும் இடையில் இன்று (18) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் இதுவரை எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காத காரணத்தினால், 48 ஆவது நாளாகவும் இன்றும் (18) வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக, அதன் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்காவிடின், தொடர்ந்தும் பணிப் புறக்கணிப்பில் தமது குழு ஈடுபடவுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *