விளையாட்டு

37வது வருடாந்த மெய்வல்லுனர் போட்டியின் ஈட்டி ஏறிதலில் கல்முனை ஆஸாத்திற்கு வெள்ளிப் பதக்கம்..!

ஸ்ரீலங்கா மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் சம்மேளனம் ஒழுங்கு செய்த 37 ஆவது வருடாந்த மெய்வல்லுநர் போட்டியில்  கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படை உத்தியோகத்தரும் சனிமெளன்ட் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரருமான ஏ.எல்.எம் ஆஷாத்  பங்குபற்றி ஈட்டி எறிதல் போட்டியில் 2ஆம் இடத்தினை பெற்று – வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.
இப்போட்டி அண்மையில் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவரான இவர் விளையாட்டுத்துறையில் சிறந்த உதைபந்தாட்ட வீரரும், கிறிக்கட் வீரருமாவார்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *