உள்நாடு

அனர்த்த ஆபத்து நிலமைகளை முகாமை செய்வதற்கான பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பிலான வழிகாட்டல் செயலமர்வு..!

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால்   அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் செயலமர்வு நடைபெற்றது.
இச் செயலமர்வில் பிரதான வளவாளராக மாகாண பிரதிக் கல்வி பணிப்பாளர் சஹீல் கலந்து சிறப்பிப்பதுடன்,  வலயக்கல்வி அலுவலகத்தின் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.ஹம்மாத் இதனை ஒழுங்கு செய்திருந்தார்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ள மூன்று கோட்டப் பாடசாலைகளிலும் இருந்து 50க்கு மேற்பட்ட ஆசிரிய ஆசிரிகைகள் கலந்து கொண்டனர்.
(எம்.எம்.ஜெஸ்மின்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *