உள்நாடு

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் உருவாக்கப்பட்டுள்ள பல வர்ண பூந்தோட்டம்..!

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் மாணவர்களின் கற்றலுக்கும்,ஆசிரியர்களின் கற்பித்தலுக்கும் அழகிய ரம்மியமான சூழலை உருவாக்கும் திட்டத்தின் கீழ் பல நிறப்பூக்களைக் கொண்ட பூந்தோட்டமொன்று உருவாக்கப்பட்டு கல்லூரி நிர்வாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

கல்லூரியின் நிர்வாக கட்டிடத் தொகுதிக்கு முன்பாகவும் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள இப் பூந்தோட்டத்தில் மலர்கள் பல வர்ணத்தில் பூத்து காட்சியளிப்பதால் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியான சூழல் தொகுதியொன்று உருவாகியுள்ளது.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர்,பிரதி அதிபர்கள், பகுதித்தலைவர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அழகிய பூந்தோட்டத்தை அமைப்பதற்கு கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் டொக்டர் ஸனூஸ் காரியப்பர் தனது பூரண பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 

(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *