உள்நாடு

பொலன்னறுவ மொரகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயம்..!

பொலன்னறுவ மொரகஸ்வெவ பகுதியில் கடந்த (13) இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வீதியில் பயணித்த கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலிருந்த தொலைத் தொடர்பு கம்பத்தில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரில் பயணித்த ஆறு பேரும் காயத்திற்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

 

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *