உள்நாடு

மன்னார் மாவட்ட தேசிய பாடசாலைகளின் தேவைகள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்..!

மன்னார் மாவட்ட தேசியப் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர்  வெற்றிடங்கள், தளபாடப் பற்றாக்குறை,  மாணவர்களின் கற்றலுக்கு ஏதுவான போதுமான கட்டிடங்கள்  இல்லாமை போன்ற பல்வேறு  பிரச்சனைகள்  தொடர்பான  கலந்துரையாடல் ஒன்று கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும்  மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கனகேஸ்வரன், வலையக்கல்விப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *