விளையாட்டு

மன்னார் வலயமட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் சம்பியன் மகுடம் சூடியது எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை

மன்னார் வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிநிகழ்வின் பெண்களுக்கான 16 வயதிற்குட்பட்ட போட்டியில் மன்னார் பெண்கள் கல்லூரி (கொண்வேன்ட்) அணியை வீழ்த்தி சம்பியன் மகுடம் சூடியது எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை.

மன்னார் வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றது. இதில் பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிகள் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளரின் தலைமையில் நேற்றைய தினம் தலைமன்னார் ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் இடம்பெற்றது.

இதில் 16, 18 மற்றும் 20 வயது பிரிவினர்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிகள் யாவும் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதில் பெண்கள் 16 வயது பிரிவினருக்கான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை மற்றும் மன்னார் பெண்கள் கல்லூரி (கொண்வேண்ட்) ஆகியன இறுதிப்போட்டிக்கு தெரிவாகின.

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் மன்னார் பெண்கள் கல்லூரி (கொண்வேண்ட்) கல்லூரியை எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை தோற்கடித்து சம்பியன் ஆனது. ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திவந்த எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை முதல் முதலாக வலய மட்ட கரப்பந்தாட்ட போட்டியில் சம்பியன் பட்டம் வென்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

பல சிரமங்களுக்கு மத்தியில் வலய மட்ட கரப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை வீராங்கனைகளுக்கு ஊரில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டதுடன் பலரும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(மிஸ்ஜாத் ஷாபி)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *