உள்நாடு

எஸ்.நஸிறுதீனின் “செழுஞ்சுடர் ” சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா..!

சாய்ந்தமருது சிஹாப்தீன் கலைக்கூடம் ஒழுங்கு செய்திருந்த  எஸ்.நஸிறுதீனின்   “செழுஞ்சுடர் ” சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா  மாளிகைக்காடு  பாவா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் தேசிய தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வைத்திய கலாநிதி எஸ்.நஜிமூதீன் தலைமையுரையினையும், தென்கிழக்குபல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.அப்துல் றஸாக் நூல் அறிமுகவுரையையும், ,நூலாசிரியர் எஸ்.நஸிறுதீன் ஏற்புரையை நிகழ்த்தினார்கள்.
இலக்கிய ஆர்வலர்கள் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *