உள்நாடு

வளத்தாப்பிட்டி, மல்வத்தை பகுதிகளில் நடைபெற்ற பாரிய வியாபார நிலைய சுற்றிவளைப்பு..!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்  சகீலா இஸ்ஸதீன்  அவர்களின் ஆலோசனையிலும், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஐ.எம்.கபீர்  அவர்களின் வழிகாட்டலிலும், பாரிய வியாபார நிலைய சுற்றிவளைப்பொன்று  வளத்தாப்பிட்டி, மல்வத்தை போன்ற  பகுதிகளில் நடைபெற்றது.
இரண்டு ஹோட்டல்களில் தொழில் புரிபவர்களுக்கு மருத்துவ சான்றிதழ் இன்மை காரணமாக தலா 10,000/- வீதமும்,  நான்கு சில்லறைக் கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டியமைக்காக 5000/- வீதமும், ஒரு மரக்கறி விற்பனையாளர் நிலத்தில் அவற்றை இட்டு தமது மரக்கறிகளை விற்பனை செய்தமைக்காக 5000/- தண்டம் அறவிடப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றினால் தீர்ப்பளித்ததுடன்  எச்சரிக்கையும் செய்யப்பட்டது.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *