உள்நாடு

பெனாஸில் ஷிப்னா எழுதிய மௌன மொழிகள் நூல் வெளியீட்டு விழா

ஸ்கை தமிழ் பதிப்பகம் வெளியீட்டில் பெனாஸில் ஷிப்னா எழுதிய மௌன மொழிகள் நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு இணையதள வாயிலாக நடைபெற்றது.

இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக கலாபூஷணம் ஏரூர் கவிக்கோ ஏ.சீ அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக கண்டி பதியுதீன் முகமது மகளிர் கல்லூரியின் ஓய்வு பெற்ற உயர்தர பிரிவு பிரதி அதிபர் கலாபூஷணம் இஸ்லாமிய செல்வி ஏ.யு.எல்.எஸ்.அரஃபா அவர்களும் அலிகார் தேசிய பாடசாலை முன்னாள் பிரதி அதிபர் திருமதி. எப்.டபிள்யூ.எம்.நசீர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நூல் வெளியீட்டு விழாவை துணிந்தெழு சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான திருமதி.ஷிஹானா நௌபர், ஸ்கை தமிழ் பணிப்பாளர் திரு.ஜே.எம்.பாஸித் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நெறிப்படுத்தியிருந்ததுடன் நடைபெற்றது.

இலக்கிய ஆர்வலர்கள், நூலாசிரியரின் குடும்பத்தினர்கள் நண்பர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர். இந்நூலானது ஸ்கை தமிழ் பதிப்பகம் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை இணைந்து வெளியிடும் பத்தாவது நூல் வெளியீடு என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *