உள்நாடு

சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட அரிசி சுங்கப் பிரிவினரால் பறிமுதல்

சட்ட விரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட 386 இலட்சம் ரூபா பெறுமதியான அரிசி கையிருப்பு, சுங்கப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த அரிசி கையிருப்பு, தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக, சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, 54,000 கிலோ கிராம் அரிசி பறிமுதல் செய்யப்பட்டிருப்தாகவும் சுங்கப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

சட்ட விரோத அரிசி தொடர்பில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுங்கப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

(ஐ.ஏ.காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *