உள்நாடு

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தக் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தம் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பை, கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

குறித்த கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள், நாளை (14) கிடைக்கப்பெறவுள்ளதுடன், மேற்படி அறிக்கை அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அதற்கேற்ப கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் எனவும், அந்த அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *