வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாங்கல்லை மக்களுக்கு சீனன்கோட்டை மக்களால் உலருணவு பொதிகள்
களுத்துறை மாவட்டத்திலுள்ள வியங்கல்லை பகுதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேருவளை சீன்னகோட்டை பகுதி வாழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட உலர் உணவுப்பொதிகள் வியங்கல்லை ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் (10-6-2024)உத்தியோகபூர்வமாக சீனன் கோட்டை பிரமுகர்களினால் கையளிக்கப்பட்டது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 550 குடும்பங்களுக்கு இதன் போது உலர் உணவு பொதிகள் பள்ளிவாசல் நிர்வாகிகளான அல்-ஹாஜ் எச்.எம்.எம்.ரியாஸ் மற்றும் அல்-ஹாஜ் எம்.ஐ.எம்.இஷாக் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
வெள்ளம் ஏற்பட்ட கடந்த 2ம் திகதி முதல் சீனன் கோட்டை பகுதியைச் சமூக சேவையாளர்கள் குழுவினர் வியங்கல்லைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை இரவு பகல் என வழங்கியதோடு நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகு மூலமும் சென்று இவர்கள் உதவிக் கரம் நீட்டியுள்ளனர்.இவர்களின் தியாகமிகு சேவைகளுக்கும்,உலர் உணவு பார்சல்கள்,சமைத்த உணவுகளை உடனுக்குடன் பெற்றுக் கொடுத்த சின்னகோட்டை வாழ் மக்களுக்கு வியங்கல்லை வாழ் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பேருவளை பீ.எம்.முக்தார்)