உள்நாடு

“சீனன்கோட்டை முத்துக்கள்” வட்சப் குழுமத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வும், புனித ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் வைபவமும்..!

பேருவளை சீனன்கோட்டைப் பகுதியில் கல்வி,சமூக,பொது சேவைகளை முன்னெடுக்கும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட “சீனன்கோட்டை முத்துக்கள்” வட்சப் குழுமத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வும் புனித ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் வைபவமும் எதிர்வரும் 19ஆம் திகதி (19-6-2024) பேருவளை அக்கர தாஹட்ட உல்லாச விடுதியில் குழுமத்தின் தலைவர் ராமிஸ் நாஸிர் தலைமையில் நடைபெறும்.

பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டியுள்ள திட்டங்கள் குறித்து இந்த ஒன்று கூடலில் ஆராயப்படவுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.

பிரதேசத்தில் உள்ள வறிய பாடசாலை மாணவர்கள் தமது கல்வியை இடையூறின்றி தொடர கற்றல் உபகரணம் வழங்கல்,தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கும்,க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கும் தோற்றிய மாணவர்களுக்கு இலவச கல்வி கருத்தரங்குகளையும் நடாத்தியதோடு பல சமூக,கல்வி,பொதுப் பணிகளையும் இந்த வட்சப் குழுமம் செய்துள்ளதாகவும் தலைவர் மேலும் கூறினார். குழுமத்தில் உள்ள உறுப்பினர்கள் பரோபகாரிகளின் பங்களிப்பு இதில் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முழு நாள் நிகழ்ச்சியாக இடம்பெறும் இந்த ஒன்று கூடலில் அங்கத்தவர்களது திறமைகளை வெளிக்கொணரும் நிகழ்வுகழும் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.

இந்த வருடம் புனித ரமழான் மாதம் இப்தார் நிகழ்வொன்றையும் பலஸ்தீன மக்களுக்கான துஆப் பிரார்த்தனையையும் இந்த வட்சப் குழுமம் நடாத்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *