உள்நாடு

அட்டாளைச்சேனை ஸஹ்ரா வித்தியாலயத்தில் கலாசார மண்டபம் திறந்து  வைப்பு..!

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை தைக்கா நகர் ஸஹ்ரா வித்தியாலயத்தில் மாணவர்களின் நன்மை கருதி நிர்மாணிக்கப்பட்ட  புதிய கலாசார மண்டபம் பாடசாலை அதிபர் எம் எஸ் .எம்.பைறூஸ் தலைமையில் திறந்து  வைக்கப்பட்டது.
முஸ்லிம் ரிலீப் நிறுவனத்தின் அனுசரணையில் பிரதேச கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜஃபரின்  ஒருங்கிணைப்பின் கீழ் கட்டப்பட்ட இவ் மண்டபத் திறப்பு விழாவுக்கு  அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றகுமதுல்லா பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பி.ரி.எம்.இர்பான், முஸ்லிம் ரிலீப் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எம்.மிஹ்லார். சட்டத்தரணி எம்.எஸ்.ஜூனைதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பாடசாலை அதிபரினால் கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும்  குறிப்பிடத்தக்கதாகும்.
(எம். எப். றிபாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *