உள்நாடு

பாத்திமா நிஹ்லாவுக்கு கல்வி அமைச்சில் கெளரவம்.

அன்மையில் வெளியான க.போ.த உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு கல்வி அமைச்சில் (10-6-2024) நடைபெற்றது.இதில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் நான்காம் இடத்தையும் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்று சாதனை நிலை நாட்டிய பேருவளை ஸேம் ரிபாய் ஹாஜியார் மகாவித்தியாலய மாணவி பாத்திமா நிஹ்லாவும் கௌரவிக்கப்பட்டார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயன்த்த தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் மேற்படி பாடசாலை பிரதி அதிபர் எம்.எஸ்.எம். நப்ஹான், மாணவியின் தாயார் பாத்திமா ஹரீஸியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.


(படங்கள் – பேருவளை பீ.எம்.முக்தார்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *