உலகம்

குவைத் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து.இது வரை 43 பேர் பலி.

குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 43 பேர் உயிரிழந்ததோடு மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தீப்பரவலுக்கான காரணம் குறித்த ஆதாரங்களை அதிகாரிகள் தேடி வருவதாகவும், உள்துறை அமைச்சகத்தின் தடயவியல் அதிகாரி மேஜர் ஜெனரல் ஈத் அல் ஓவெய்ஹானை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *