உள்நாடு

சாய்ந்தமருதில் எஸ்.நஸீர்தீனின் ” செழுஞ்சுடர் ” சிறுகதைத் தொகுதி வெளியீடு

சாய்ந்தமருது சிஹாப்தீன் கலைக்கூடம் ஒழுங்கு செய்துள்ள எஸ். நஸீறுதீனின் “செழுஞ்சுடர்” சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா எதிர்வரும் புதன் கிழமை 12 ஆம் திகதி மாலை மாளிகைக்காடு பாவா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் தேசிய தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

வைத்திய கலாநிதி எஸ்.நஜிமூதீன் தலைமையுரையினையும், தென்கிழக்குபல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.அப்துல் றஸாக் நூல் அறிமுகவுரையையும், தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் நயத்தலுரையையும், தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உதவி பதிவாளர் மன்சூர் ஏ காதர் விமர்சன உரையையும் நிகழ்த்தவுள்ளனர்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *