உள்நாடு

கராத்தேயில் மட்டுமல்ல உயர்தர பரீட்சையிலும் சாதித்த இரட்டை சகோதரிகள்

அம்பலாங்கொடை ஜே.கே.எஸ் கராத்தே பயிற்சி நிலையத்தில் கராத்தே பயிற்சி பெறும் எம்.ஜி.மஹேஷிகா செவ்வந்தி மற்றும் எம்.ஜி.மதுஷிகா செவ்வந்தி ஆகிய இரட்டைச் சகோதரிகள் இவ்வருட உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மூன்று பாடங்களிலும் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

காலி நெலுவ தேசிய பாடசாலையில் வர்த்தகம் பயின்ற இந்த இரட்டை சகோதரிகள் கராத்தே கறுப்பு பட்டி பெற்றவர்களாவர். கல்விக்கு மேலதிகமாக இவர்கள் இருவரும் கராத்தேயில் அகில இலங்கை ரீதியில் பல வெற்றிகளை பெற்றுள்ளனர்.

விளையாட்டு மற்றும் கல்வி இரண்டிலும் சிறந்து விளங்கும் இந்த இரட்டை சகோதரிகள், பாடசாலையிலும் கராத்தே பயிற்சி மையத்திலும் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


(எம்.எம்.ஜெஸ்மின்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *