மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் பொத்துவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார் மின்கம்பத்தில் மோதுண்டதில் காரில் பயணித்த மூவர் காயம்
பொத்துவில் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார் செவ்வாய் அதிகாலை (11) பாதையை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதுண்டதில் கார் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் காரில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின் கம்பம் சேதத்திற்குள்ளானதால் சில மணி நேரம் அப் பிரதேசத்தில் மின் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
(அஸ்ஹர் இப்றாஹிம்)